ரஞ்சி டிராபி: மும்பைக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழ்நாடு அணி!!

0
ரஞ்சி டிராபி: மும்பைக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழ்நாடு அணி!!
ரஞ்சி டிராபி: மும்பைக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழ்நாடு அணி!!

தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரானது டிராவில் முடிந்தது.

ரஞ்சி டிராபி:

இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில், தமிழ் நாடு மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்து இருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், தமிழ்நாடு அணி வீரர்கள், மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 144 ரன்களுக்குள் சுருண்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த இலக்கை துரத்திய, மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்திருந்தது. இதில், அதிகபட்சமாக சர்பராஸ் கான் 162, தனுஷ் கோட்யான் 71 ரன்கள் எடுத்திருந்தனர். இதனால், மும்பை அணி 337 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

ISL: ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை அணி…, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்??

இதில், தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி 548 எடுத்து, 211 ரன்கள் முன்னிலை அடைந்தது. இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நேரத்தில், இரு அணியின் கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால், போட்டியானது டிரா செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here