பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் அக்டோபர் 15 ஆம் தேதி திறப்பதை அடுத்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்கியுள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட பொது முடக்க உத்தரவு தற்போது வரை பால் தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன.
Here are the highlights:
As per para -1 of @HMOIndia's order no. 40-3/2020-DM-I(A) dated 30.09.2020 for reopening, States/UT Governments may take a decision in respect of reopening of schools and coaching institutions after 15th Oct in a graded manner. #SchoolGuidelines pic.twitter.com/JLfJ97qJsF
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) October 5, 2020
தற்போது வரும் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படலாம் என்று அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
நெறிமுறைகள்:
கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அது,
- வளாகங்களில் உள்ள கேன்டீன், கழிப்பிடம், சமையல்கூடங்கள், நூலகங்கள், ஆய்வுக்கூடங்கள் இவை அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் அனைத்து இடங்களும் காற்றோட்டம் உள்ளதாக அமைவது அவசியம்.
- பள்ளி நிறுவனங்கள் பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும். குழுக்களை சேர்ந்தவர்கள் மாணவர்களுக்கு அவசரக்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், சுகாதார நலன்களையும் மாணவர்களுக்கு கற்று தர வேண்டும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக சமூகஇடைவெளி, மனித இடைவெளி இவை அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். பள்ளி விழாக்கள் நடைபெறுவதை தவிர்த்தல் வேண்டும்.
- பள்ளிகளுக்கு வரும் மாணவமாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதனை நாள்தோறும் அணிந்திருத்தல் அவசியம்.
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வீட்டில் இருந்து படிக்க விரும்பினால், அதனை நடைமுறைபடுத்தலாம்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கோவிட் 19 நோய் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருத்தல் அவசியம். கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- கல்வியாண்டிற்கான கால அட்டவணையில் நிறுவனங்கள் தங்களுக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். சாப்பாடு இடைவேளை, வகுப்பிற்கான இடைவேளை தகுந்த மாற்றங்களோடு இருக்க வேண்டும்.
- பள்ளிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆலோசகர்கள் கண்டிப்பாக இருத்தல் அவசியம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுந்த இடைவேளைகளில் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் அவர்களை வீட்டில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
- பள்ளிகளுக்கு வருபவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.
இவ்வாறாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அனைவரும் கடைபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.