பிறந்த குழந்தைகளுக்கு எப்பொழுதும் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் ஆதலால் தான் அவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் எளிதாக பரவிக்கிறது. இப்பொழுது குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
குழந்தை
- பிறந்த குழந்தைக்கு சருமம் மிருதுவாகவும் லேசாகவும் இருக்கும். இதனால் எளிதில் தொற்றுகள் வர வாய்ப்புள்ளது. அதாவது எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
- வாரத்திற்கு ஒருமுறை வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். மேலும் எந்த காலமாக இருந்தாலும் சரி குழந்தைகள் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கைப்பிடிக்க கற்று தர வேண்டும்.
- 10 மாத குழந்தைகளின் கை, கால்களை அடிக்கடி வெந்நீரால் சுத்தமான துணியை வைத்து துடைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் நன்கு தூங்குவர். குழந்தைகளுக்கு தூக்கம் என்பது மிக முக்கியம்.
- 5 வயது குழந்தைகள் என்றால் தினமும் ஒரு பழங்ககளை சாப்பிட்டு வர வேண்டும். மேலும் கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் காலை மாலை என இரு வேலைகளிலும் பல் துலக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். இதனால் வாயில் இருக்கும் கிருமிகள் அழியும்.
- குழந்தைகளுக்கு வெளியில் சாப்பிடும் பழக்கத்தை குறைக்க வேண்டும். முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து கொடுங்கள்.