விரைவில் வருகிறது 20 ரூபாய் நாணயம் – முழு விபரங்கள் இதோ..!

0

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள சில்லறை நாணயங்களில் அதிக மதிப்புடையது 10 ரூபாய். இந்நிலையில் விரைவில் 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அச்சடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அச்சடிப்பு தொடக்கம்:

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 10 ரூபாய் காசுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கிலும் 20 ரூபாய் அச்சடிக்கும் பணிகள் மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, மண்டல அலுவலகங்களுக்கு புதிய காசுகளை அனுப்பி வைக்கும். ஏப்ரல் மாதமே மக்கள் கையில் கிடைக்க வேண்டிய இந்த 20 ரூபாய் நாணயம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போகி உள்ளது.

20 ரூபாய் நாணயம்:

இந்த புதிய 20 ரூபாய் நாணயம் தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. இது வட்ட வடிவில் 8.53 கிராம் எடையுடன் 12 கார்னர்களை கொண்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சத்யமேவ ஜெயதே என்ற வாசகமும், அசோகா பில்லரும், மறுபக்கத்தில் பாரத் என்று இந்தியிலும், இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுத்துகள் இடம் பெற்று உள்ளது.மறுபக்கம் 20 என்ற எண்ணும், தானியமும் இடம் பெறும் வகையில் அச்சிடப்படுகிறது.

வரவேற்பு இருக்குமா..?

தமிழகத்தில் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை மக்களும், சில வணிகர்களும் வாங்குவதில்லை. இந்நிலையில் 20 ரூபாய் நாணயம் மக்களிடம் வரவேற்பை பெறுவது கடினமே என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here