இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சென்னை செம்மஞ்சேரியில், அடுத்தவருக்கு சொந்தமான வீட்டை ஆன்லைனில் குத்தகைக்கு விட்ட திரிவானா என்ற சௌந்தர்ய லட்சுமி, இரு பெண்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து திரிவானா மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததால், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வீட்டு உரிமையாளர் எனக்கூறி இரு பெண்களிடமும் தலா ரூ.2 லட்சம் என ரூ.4 லட்சத்தை, மனுதாரரும் அவரது கணவரும் மோசடி செய்தது உறுதியாகி உள்ளதால் முன் ஜாமீன் வழங்க முடியாது.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை!!!