தமிழகத்தில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில கடை ஊழியர்கள் ரேஷன் அரிசி தீர்ந்து விட்டதாக கூறி கள்ளச் சந்தையில் விற்று வருவதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை சோதனை சாவடிகளிலும், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.