
தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் தகுதியான ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தொடங்கப்பட்டது. இந்த திட்ட பலன்களை பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், 56.6 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உரிய காரணத்தை நாளை மறுநாள் (செப்டம்பர் 18) SMS மூலம் தெரியப்படுத்த உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஒருவேளை அதில் குறிப்பிட்ட காரணம் தவறாக இருப்பின், தகுந்த ஆவணங்களை கொண்டு, இ-சேவை மூலமாகவோ அல்லது கோட்டாட்சியர் அலுவலகத்திலோ மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்து உள்ளனர். அதேபோல் SMS பெறப்படாதவர்களும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய காரணங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.