பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – விஜய் சேதுபதி வருத்தம்!!

0

விஜய் சேதுபதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்:

விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ஏற்கனவே அவரும் பார்த்திபனும் இணையும் துக்ளக் தர்பார் படத்திற்கான படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கலந்து கொண்ட அவர் பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியில் வெட்டினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் இவ்வாறு பாடகத்தியால் கேக்கை வெட்டுவது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாகி விடும் என்று பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. டிக்டாக்கில் வீடியோ பதிவிடும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இதுபோல கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டு அது பல பிரச்சனைகளை கிளப்பியது.

இயக்குனர் சுசீந்திரனின் தயார் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்!!

இது குறித்து தற்போது விஜய் சேதுபதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எனது பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நான் வாளால் கேக்கை வெட்டியிருந்தது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தபடுகிறேன். அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் பட்டாக்கத்தி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே அந்த படக்குழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடும்போது இநது போன்ற ஒரு சூழல் உருவாகி விட்டது. இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விட்டது என பலரும் கூறியிருப்பதை எண்ணி வருந்துகிறேன். இனி இது போன்ற விஷயங்களில் கவனமுடன் நடப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here