‘நயன்தாரா யார்கூட ஜோடி சேர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை’ – மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்!!

0

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில், முதன் முறையாக நயன்தாரா வேறு ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து தனக்கு பொறாமை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

நயன்தாரா ஜோடி:

நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் அடுத்த படமான “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஜோடி நடித்து வெற்றிகரமாக ஓடிய நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி ஒன்றிணைகிறது. இப்படத்தில் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மோடியின் சென்னை பயணம் – 6000 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!!

தற்போது இப்படத்தின் first look poster ஐ வெளியிட்ட விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நயன்தாரா ஒருவருடன் ஜோடி சேர்வதை கண்டு முதல் முறையாக எனக்கு பொறாமை உணர்வு ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் “சமந்தா நீங்கள் மிகவும் அருமையானவர். எங்கள் பார்ட்டியில் உங்களையும் இணைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவ்வப்போது தாங்கள் இருவரும் செல்லும் ட்ரிப்புகள் மற்றும் பார்ட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது விக்னேஷ் சிவனின் வழக்கம். அப்புகைப்படங்களோடு அவர் பதிவிடும் வசனங்கள் நயன் மீது விக்னேஷ் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமான அமைந்திருக்கும். தற்போது அவர் கூறியிருக்கும் இந்த கருத்து இதற்கு முன்பு நயன் ஜோடி சேர்ந்த கதாநாயகர்கள் மீது விக்னேஷ் சிவன் பொறாமையில் இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் கூறுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here