மறைந்த பிரபல கன்னட நடிகரின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் புகைப்படம் வெகு நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேக்னா ராஜ் வெளியிட்ட அவரது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேக்னா ராஜ்:
தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படம் மூலமாக அறிமுகமாகிய நடிகை மேக்னா ராஜ், அதன் பிறகு பல்வேறு மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அர்ஜுனின் உறவினரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது அவரது கணவர் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அதன் பிறகு பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கியிருந்த மேக்னா அவரது வளைகாப்பு மற்றும் பிறந்த குழந்தையின் முதல் புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டார்.
பிரதமருக்கு எதிரான ட்வீட் – நடிகை ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்!!
அதன்பிறகு கடந்த சில மாதங்களாக அவர் குழந்தையின் படங்கள் எதையும் வெளியிடவில்லை. சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னாவின் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் அவர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு குழந்தையின் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் எமோஷனலாக இருப்பதால் மிகவும் வைரலாகியுள்ளது. கணவரை இழந்த நிலையில் தனது கணவர் தான் மீண்டும் தனக்கு மகனாக பிறப்பார் என்று மேக்னா கர்ப்பமாக இருந்த போது கூறியது அப்படியே நடந்து விட்டதாக குழந்தையின் புகைப்படத்தை பார்த்த அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.