விஷ்ணு வரதனின் இயக்கத்தில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் இளம் காதாநாயகனாக வலம் வருகிறார். அவரை தொடர்ந்து அவரது தம்பியான ஆகாஷும் தற்போது ஹீரோவாகிறார். இயக்குனர் விஷ்ணுவரதனின் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகாஷ் முரளி:

நடிகர் முரளி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அவரது மூத்த மகன் அதர்வா ‘பாணா காத்தடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெளியாகிய சில மாதங்களிலேயே முரளி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதன் பிறகு அதர்வா பல நல்ல படங்களில் நடித்து அப்பாவின் பெயரை காப்பாற்றினார். அவர் தற்போது குருதி ஆட்டம் , தள்ளிபோகாதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருமணமான நடிகரை காதலிக்கும் லாஸ்லியா – ஹர்பஜன் போட்ட டிவீட்டால் பரபரப்பு!!

இந்நிலையில் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியான ஆகாஷும் தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாகிறார். தற்போது ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கி வரும் விஷ்ணு வர்தன், அந்த படத்தினை தொடர்ந்து ஆகாஷ் நடிக்கவுள்ள படத்தினை இயக்குகிறார். ஷெர்ஷா படம் ஜூனில் வெளியாகுமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் தான் ஆகாஷுக்கும் தயாரிப்பளார் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்னேஹா பிரிட்டோவிற்கும் காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்தது.  ஸ்னேஹா பிரிட்டோ நடிகர் விஜயின் உறவுக்கார பெண் என்பதும், இவர் தனது 18வது வயதிலேயே இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரின் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை ரீமேக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here