ரவீந்தர்- மகாலட்சுமி திருமண விவகாரம் தான் இணையம் முழுக்க பேசப்பட்டது. மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக நெட்டிசன்கள் கண்டபடி பேசி வந்தனர். ஆனால் அதனை இந்த ஜோடி காதில் வாங்கவே இல்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்பொழுது ரவீந்தர் வழக்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். மேலும் மஹாலக்ஷ்மியும் சீரியலில் நடிக்க சென்று விட்டார். இரண்டு பேரும் அடிக்கடி இன்டெர்வியூ கொடுத்து வந்த நிலையில் இப்பொழுது தனது தனது வேலைகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!
சமீபத்தில் இந்த தம்பதிகள் முதல் மாத திருமண விழாவை கொண்டாடினர். இப்படி இருக்க இப்பொழுது இவர்களுக்கு திருமணம் ஆகி 50 நாட்கள் கடந்து விட்டது. ஆரம்பத்தில் நெகட்டிவாக பேசி வந்த நெட்டிசன்கள் இப்பொழுது அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இதே மாதிரி சந்தோசமாக இருக்கிங்க என்று வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஜோடி 50வது நாளை கொண்டாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.