ஹோட்டல் ரூம்களில் கேமரா – தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!

0
ஹோட்டல் ரூம்களில் கேமரா - தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!
ஹோட்டல் ரூம்களில் கேமரா - தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!

பிரபல ஹோட்டல் அறைகளில், ரூம் எடுத்து தங்கிய தம்பதிகளின் அந்தரங்க வீடியோக்களை படமாக எடுத்து, பணம் பறித்து வந்த மர்ம கும்ப கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் கைது:

ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கும் போது, அதில் தேவையற்ற கேமராக்கள் பொருத்தியிருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என காவல்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், OYO ஹோட்டலில் ஒரு தம்பதி அறை எடுத்து தங்கினர். அந்த அறையில், நடந்த தம்பதிகளின் அந்தரங்க செயல்களை ரகசிய கேமராக்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் அவர்களிடம் அதற்கு பணம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் இதை இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மிரண்டு போன தம்பதிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் உள்ளிட்ட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கல்யாணம் ஆகி அதற்குள் இரண்டாவது குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மஹாலக்ஷ்மி – குவியும் வாழ்த்துக்கள்!!

இவர்களிடமிருந்து 11 லேப்டாப்கள், 21 மொபைல்கள் மற்றும் 22 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலின் கூட்டாளி இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவனையும் பிடிப்போம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து OYO ஹோட்டல் நிர்வாகம் இன்னும் பதிலளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here