நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கட்சி குறித்த கேள்விகள்:
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தான் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதற்காக காத்திருந்த அவரது ரசிகர்கள் அப்போது முதல் கட்சியின் பெயர், சின்னம், கொள்கை குறித்து பல கேள்விகளை கேட்டு வந்தனர்.
கட்சி அறிக்கை:
இந்நிலையில் வரும் 31ம் தேதி கட்சியின் பெயர் மற்றும் கட்சி தொடங்கும் நாள் குறித்து அறிவிக்கப் போவதாக செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் புதிதாக தொடங்க உள்ள கட்சிகளுக்கு பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதில் “மக்கள் சேவைக் கட்சி” என்ற கட்சிக்கு ஆட்டோ ரிக் ஷா சின்னத்தை ஒதுக்கி இருந்தது.
தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?? புதிய சிக்கல்!!
இந்த பெயர் தான் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் என்று பல செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்சி பெயர் மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பில் ஒரு குறிப்பிட்ட பெயரை ரஜினி மக்கள் மன்றக் கட்சியின் பெயர் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தவறானது. பெயர் மற்றும் சின்னம் குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும் வரை கட்சியின் காவலர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று அறிவித்து உள்ளார்.