ராஜா ராணி 2 சீரியலில் செந்தில், சரவணன் இருவரும் சங்க தேர்தலுக்கு போட்டியிடும் நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என பார்க்கலாம்.
ராஜா ராணி 2
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் செந்தில், சரவணன் இருவரும் சங்க தேர்தலுக்கு நாமினேட் செய்கின்றனர். முதலில் சரவணன் நாமினேஷன் செய்து விட்டு வெளியே வர பிறகு செந்தில் நாமினேஷன் செய்கிறார். வெளியே வந்த சரவணனை நிறுத்தி பரந்தாமன் உன் விரலை வைத்து எப்படி உன் கண்ணையே குத்துறேன் பார்த்தியா? என நக்கலாக பேசுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மறுபுறம் சந்தியா, ஜோதி அனைவரும் ஷாப்பிங் செல்கின்றனர். அப்போது மூவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகின்றனர். அங்கு ஒருவர் ஜோதியை பார்த்து கண்ணடித்து அசிங்கமாக பேச, அதை பார்த்த சேட்டா அவர்களிடம் சண்டை போட பிறகு இருவருக்கும் இடையே சண்டை உருவாகிறது.
உண்மைகளை உடைத்த ஷிவின்., மீண்டும் டார்கெட் ஆகும் அசீம் – வெளியான பரபரப்பு ப்ரோமோ!!
இதை ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து குடிபோதையில் ஐஏஎஸ் பயிற்சியாளர்கள் ரகளை என டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஆக போட்டு விடுகின்றனர். பிறகு சந்தியா சரவணனுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் போனை எடுக்காமல் சங்க நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். பிறகு அந்த நியூஸ் டிவியில் வர அதை பயிற்சி அதிகாரி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.