தமிழகத்தில், இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரருக்கு ரூபாய் 1000 வழங்கும், முதல்வரின் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
ஆட்சியர் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை, தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பொது மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை ரீதியாக பல இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில், இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சீர்காழி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் அண்மையில் அறிவித்தார்.
நாளை முதல் இந்த தொகை வழங்கப்பட உள்ளதாகவும், ரேஷன் கடைகளில் மக்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.