தொடர் சதங்களை குவித்து வந்த தமிழக வீரர் ஜெகதீசன், CSK அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து சில கருத்து தெரிவித்துள்ளார்.
நாராயண் ஜெகதீசன்:
விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளையும் பல வித சாதனைகளையும் படைத்து வருகிறது. இதில், குறிப்பாக, தமிழக வீரரான நாராயண் ஜெகதீசன் தொடர்ந்து 5 போட்டிகளில், சதங்களை குவித்து சாதனை படைத்தார். இவர், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், 141 பந்துகளில் 25 பவுண்டரி 15 சிக்ஸர் உட்பட 277 ரன்கள் அடித்து, குறைந்த பந்தில், அதிவேகமாக 200 ரன்களை கடந்து ரோஹித் சர்மா சாதனையையும் முறியடித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சாதனைக்கு சொந்தகாரரான ஜெகதீசன், பேட்டி ஒன்றில், ஒவ்வொரு போட்டியிலும், முழுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என்று கூறியுள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கிலும் எனது திறனை மேம்படுத்த கடினமாக பயிற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
FIFA உலக கோப்பை: கோலின்றி முடிந்த ஆட்டங்கள்…, புள்ளிகளை பகிர்ந்து கொண்ட அணிகள்!!
இதனை தொடர்ந்து, CSK அணியில் இருந்து, விடுவிக்கப்பட்டது குறித்து ஜெகதீசன், அது என்னுடைய விருப்பம் கிடையாது, அணி நிர்வாகம் எடுத்த முடிவு தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் எந்த அணியில் இருந்தாலும், எனது பெஸ்ட் கொடுக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். இவரை CSK அணியில் இருந்து விடுவித்ததுக்கு, அணி நிர்வாகம் கண்டிப்பாக ஃபீல் பண்ணும் என்று தெரிகிறது.