பார்வதியை அடைய முயற்சிக்கும் விக்கி..,மகளின் மானத்தைகாக்க கொலை செய்யும் சிவகாமி.., அனல்பறக்கும் ராஜா ராணி 2 ப்ரோமோ!!

0
பார்வதியை அடைய முயற்சிக்கும் விக்கி..,மகளின் மானத்தைகாக்க கொலை செய்யும் சிவகாமி.., அனல்பறக்கும் ராஜா ராணி 2 ப்ரோமோ!!

சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாம் அடுத்தடுத்து பல டிவிஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2 சீரியல். இதில் பார்வதியை மிரட்டி திருமணம் செய்து கொள்ள நினைத்த விக்கிக்கு சந்தியா போலீசில் ஒப்படைத்து தண்டனை வாங்கி கொடுத்திருந்தார். மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த விக்கி எப்படியாவது பார்வதியை அடைந்து, அவர் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார். இந்த நிலையில் இதன் நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில் பார்வதி கணவர் விக்கியை கடத்திய விக்கி, பார்வதியை தான் இருக்கும் இடத்திற்கு தனியாக வர சொல்கிறார். அப்படி வரவில்லையென்றால் பாஸ்கரை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். இந்த நிலையில் விக்கி இருக்கும் இடத்திற்கு வந்த பார்வதியை தான் சொல்வதை கேட்குமாறு கூறுகிறார். அதற்கு பார்வதி மறுக்கவே, அவர் முன்னரே பாஸ்கரை அடித்து துன்புறுத்துகிறார்.

பொன்னியின் செல்வனை மணிரத்னம் எடுக்க வேண்டாம்..,அப்பவே சொன்ன அமைச்சர் துரைமுருகன் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்த நேரத்தில் தன் கணவர் உயிரை காப்பாற்ற நினைக்கும் பார்வதி, விக்கியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறார். இதன் பிறகு பார்வதியை தனியே அழைத்து சென்ற விக்கி, அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போது அங்கு வந்த சிவகாமி தன் மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக விக்கியை தலையில் அடித்து கொன்று விடுகிறார். இப்படியான அனல்பறக்கும் காட்சிகளுடன் வெளியான இந்த ப்ரோமோ, இந்த சீரியலின் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here