இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2:
தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்துக் காட்டியுள்ளார். இதில் முதல் கடந்த வருடம் வெளியாகி வசூலை வாரி குவித்த நிலையில், இரண்டாவது பாகமும் வசூல் சாதனை படைக்கும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளாமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் அமைச்சர் துரை முருகனும் ஒருவர். அவர் பேசியதாவது, இப்படத்தை தயாரிக்க போகிறேன் என்று சுபாஸ்கரன் என்னிடம் கூறினார். அதற்கு நான் அந்த நாவலை நீங்கள் படிச்சிருக்கீங்களா என்று கேட்ட போது அவர் இல்லை என்று சொன்னார். இப்படத்தை எடுக்க உங்களுக்கு அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். ஏனென்றால், கதைகளை படமாக்குவது ஈசி , காவியங்களை படமாக்குவது கஷ்டம் என்று கூறினேன்.
அதனையடுத்து யாரு இயக்குனர் என்று கேட்டேன் மணிரத்னம் என்றார். அவர் இருட்டுலயே படத்தை எடுப்பவர் வேண்டாம் என்று சொன்னேன். நான் சொன்னதை மீறி படத்தை எடுத்தார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்ததும் நான் சொன்னது தவறு என்று புரிந்து கொண்டேன். வீட்டிலேயே அவரை நினைத்து சல்யூட் வைத்தேன். இப்படத்தின் இரண்டாம் பாகமும் அமோக வெற்றியை தேடி தரும் என்று கூறினார்.