தமிழகத்தில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியில் சமீப காலமாக பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வந்தது. இதற்கு தெம்பூட்டும் விதமாக பா.ஜ.க. கட்சியில் இருந்த ஒரு சில பேர் அ.தி.மு.க. கட்சிக்கு மாறினார். மேலும் பல பகுதிகளில் பா.ஜ.க.வினர் எடப்பாடி புகைப்படத்துக்கு தீயிட்டனர். இதே நேரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகி கூட்டத்தில் பரபரப்பாக பேசியிருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது “அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தான் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் கட்சியில் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு உறுப்பினராக செயல்படுவேன்” என கூறியிருந்தார். இதனால் கூட்டணி கட்சி முடிவுக்கு வந்து விடும் என நினைத்த வேளையில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது பா.ஜ.க. கட்சியின் முக்கிய தலைவர் அமைச்சர் அமித்ஷா “பா.ஜ.க. கட்சி பெரும்பான்மையாக இல்லாத இடத்தில் கூட்டணி கட்சி தான் வலு சேர்க்கும்.
சமந்தாவை கழட்டிவிட்டு ஹிந்தி நடிகையுடன் காதல் வயப்பட்ட நாகசைதன்யா.., ஆதாரத்துடன் அம்பலமான உண்மை!!
அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணியில் தான் உள்ளோம்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூட்டணியாக தான் உள்ளோம். இனி வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும்.” என பேட்டி அளித்துள்ளார். இதனால் பூகம்பாக வெடிக்கும் என எதிர்பார்த்த பிரச்சனைகளுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.