TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து அடுத்த வாரம் விளக்கமளிக்க உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 4
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் TNPSC குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. இதில் 7301 பணியிடங்களுக்கான இந்த தேர்வில் சுமார் 18.36 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் TNPSC காலம் தாழ்த்தி வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் புகார் அளித்து வந்தனர். மேலும் கிட்டத்தட்ட 5 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை. இது போன்ற அனைத்து புகார்களுக்கும் TNPSC எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும் இந்த தேர்வு குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் சட்டசபையில் விளக்கமளித்தாலும் TNPSC அமைப்பு மௌனம் காத்து தான் வந்தது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கூடிய விரைவில் TNPSC தேர்வாணையம் விளக்கமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.