‘2.5கோடி கொரோனா தடுப்பூசி மருந்து சேமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!!

0

தமிழகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிப்பதற்காக வேலைகள் நடந்து வருகின்றது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்களுக்கு வழங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் மற்றும் அதனை பதப்படுத்துவதற்கும் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் 2.5கோடி கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாவட்ட அளவின் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 2,850 மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி சேமிப்பு கிடங்கை ராதா கிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பின 2,156 பெருகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் தொடர்பில் இருந்த 3,321 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உருமாறிய கொரோனாவால் புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமை படுத்தி வருகின்றனர். இது வரை உருமாறிய கொரோனவால் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 32 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தீவிரமான கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிஉள்ளார். மேலும் இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை – செம்பரப்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு!!

ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கூறியதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5 மடங்கு குறைந்துள்ளது” இவ்வாறு அவர் கூறியுளளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here