மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர்.
மருத்துவ மாணவ மாணவியர் வழக்கு:
தமிழக மருத்துவ கல்லூரிகளில் பல மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் மாணவ மாணவியரின் கல்வி சான்றிதழ்களும் 2 ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிபந்தனையை எதிர்த்து 276 மாணவ, மாணவியர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டதாவது “அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கை அளித்துள்ள குறிப்பேட்டில் கூட இது போல் எந்த நிபந்தனையும் இல்லை. இது ஒரு சட்டவிரோதமான நிபந்தனை ஆகும்”. இதனை விசாரித்த தனி நீதிபதிகள் இந்த நிபந்தனையை ரத்து செய்ய உத்தரவிட்டனர். இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்களது சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.
உய்ரநீதிமன்ற தீர்ப்பு:
ஆனால், இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வின் இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தீர்ப்பு என்னவென்றால் “தனி நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும். அப்போது தான் அவர்களது சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரியானது தான். பணியிடம் இல்லாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியரின் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும்” இவ்வாறாக உத்தரவிட்டுள்ளனர்.