பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகி உள்ள “பொன்னியின் செல்வன்- முதல் பாகம்” திரைப்படம், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.
பொன்னியின் செல்வன்:
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப் 30ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த திரைப்படத்தில் முன்னணி ஹீரோ,ஹீரோயின்களான ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், படத்திற்கான ப்ரீ புக்கிங் படு மும்மரமாக நடந்து வருகிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய காரணம்? கோபத்தில் சீறிய கஸ்தூரி ராஜா – இதுக்குதான் நான் பேசவில்லை என ஆவேசம்!!
அதாவது ப்ரீ புக்கிங் திறந்த உடனே சில மணி நேரத்தில் முடிந்து விடுவதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் வெளிநாட்டிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக USA வில் ப்ரீ புக்கிங் இல் மட்டுமே இதுவரை ரூ.1 லட்சத்துக்கும் மேல் வசூலித்து விட்டதாக தகவல்கள் கூறுகிறது.