இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு, ரோஹித் சர்மா தொடர்ந்து ஓய்வளித்து வரும் காரணத்தால் BCCI அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா
இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் விளையாட உள்ளது . இந்த தொடரில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பந்து வீச்சாளர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் தான் பந்து வீச்சாளர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்க உள்ளதாக ரோஹித் கூறியுள்ளார். மேலும் அண்மையில் தான் ரோஹித்திடம், BCCI உலக கோப்பைக்கான ப்ளேயிங் 11 ஐ தயார்படுத்த வேண்டும் என கூறினார்கள்.
ஆனால் ரோஹித் இதுபோன்ற தவறை மீண்டும் செய்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது தென்னாப்பிரிக்க தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் ப்ளேயிங் 11 ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கு BCCI நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க, எங்களுக்கு உலக கோப்பை பட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என கோபமாக தெரிவித்துள்ளனர்.