தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொள்ள, போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
தனுஷ் தந்தை பதில் :
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என நினைத்தபோது, அதற்கான சாத்திய கூறுகள் இதுவரை உருவாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் நடிகர் தனுஷின் தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா-விடம் இந்த விவாகரத்து குறித்து அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இது சம்பந்தமில்லாத கேள்வி, இதுக்காகத்தான் நான் இதுவரை மீடியாவை சந்திக்காமல் இருந்தேன்.
அதிதி பாடு இதோட அவ்ளோதான்., இனி தாக்கு பிடிக்க முடியாது – அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா?
அத்துமீறி கேள்வி கேட்கிறீர்கள் என கோபத்தில் சீறினார். இதை பார்த்த ரசிகர்கள், தனுஷின் தந்தை இப்படி கோபப்பட்டு கத்தும் அளவுக்கு அவர்களுக்குள் என்னதான் நடந்தது, என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.