உலகம் முழுவதும் தன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி வரும் கொரோனாவால், இதுவரை 64.41 லட்சம் பேர் பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா :
உலக மக்களை பெரும் அவல நிலைக்கு தள்ளிய கொரோனா தொற்று, இன்னும் ஓய்ந்தபாடில்லை. 3 வருடங்கள் ஆகியும் இந்த தொற்றின் பாதிப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் இந்த தொற்று காரணமாக அமலில் இருந்த பொது ஊரடங்கால், உலகம் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வர இன்னும் உலகம் முயன்று வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் கொரோனாவின் தீவிர தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி தான் ஒரே பாதுகாப்பு என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வரும் நிலையில், உலகில் பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.41 லட்சத்தை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!
அதாவது உலகம் முழுவதும் 6,541,244 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளதாகவும் மற்றும் கொரோனாவால் 620,488,217 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 600,777,787 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 39,790 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகிறது. இதனால் பொதுமக்கள் இன்னும் அச்சத்திலிருந்து மீண்ட பாடில்லை