தமிழக்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பாமக கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாமக கட்சி அதிமுக கட்சியுடன் கூட்டணி செய்துள்ளது. மேலும் அதிமுக மற்றும் பாமக கட்சியினருக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் மிக சுமுகமாக முடிந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சி பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதனால் பாமக கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவர்களுக்கு வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக தான் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். தற்போது பாமகவினர் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் பாமக கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
#INDvsENG நான்காவது டெஸ்டில் மான்ஸ்டராக மாறிய ரிஷாப் பாண்ட் – வைரலாகும் மீம்ஸ்!!
தற்போது அந்த வகையில் தேர்தல் ஆணையம் பாமக கட்சியின் சின்னம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பாமக கட்சிக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். பாமகவினரின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.