இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரிஷாப் பாண்ட் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிகாட்டியுள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்றது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் ரிஷாப் பாண்டின் ஆட்டம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. அவர் தனது முதல் இன்னிங்சில் தனது அரைசதத்தை முதல் 81 பந்துகளில் கடந்தார். மேலும் அதிலிருந்து சதத்திற்கு பாண்ட் வெறும் 34 பந்துகளில் கடந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடைசி 34 பந்துகளில் அரங்கத்தையே அலற வைத்தார் ரிஷாப் பாண்ட். மேலும் உலக தரம் வாய்ந்த அன்டேர்சனின் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பாண்ட் தந்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். தற்போது இவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் உலகின் தாதா கூறியதாவது, நெருக்கடியான நேரத்தில் ஓர் அற்புதமான ஆட்டம்.
#INDvsENG 4வது டெஸ்ட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி! தொடரை கைப்பற்றி அசத்தல்!!
இது முதலும் அல்ல முடிவும் அல்ல. பந்துகளை அடித்து ஆடும் திறனை தொடருங்கள். மேலும் கிரிக்கெட்டில் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டாகவும் மேட்ச் வின்னராகவும் இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளார். தற்போது அனைத்து தரப்பினரிடமும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. மேலும் மாஸ்டர் பட போஸ்டரில் ரிஷாப் பாண்டை எடிட் செய்தும் இணையத்தில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசனைகள். தற்போது இந்த மீம்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.