‘எனக்கு இந்த வீட்டில இருக்கவே பிடிக்கல, எங்கேயாச்சும் போயிடுறேன்’ – மூர்த்தியோடம் கதறும் கண்ணன்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகிறது. மீனா திருந்தி இருப்பார் என்று பார்த்தல் தொடர்ந்து எதாவது பிரச்சனையை இழுத்துக்கொண்டே தான் இருக்கிறார். மேலும் தற்போது வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஒன்று. தனம் கற்பமானத்தில் இருந்து விழாக்கோலமாக கொண்டாடி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மறுபடியும் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. மீனா தனது கோவத்தை எல்லாம் மறந்து திரும்ப வீட்டிற்கு வந்துள்ளார் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நாட்கள் செல்ல செல்ல மீனா மறுபடியும் தனது பழைய குணத்தை காட்ட ஆரம்பித்திவிட்டார். மீனாவின் அத்தை உள்ளே நுழைந்ததில் இருந்து குடும்பத்தில் பல பிரச்சனை பிரிவினை போன்றவை ஏற்பட்டு வருகின்றனர். முதலில் வீட்டிற்கு பின்னால் தனியாக அடுப்பு வைத்து சமைத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

அடுத்து ஜனார்தனனிடம் சொல்லி தனியாக அடுப்பு வாங்கி வீட்டில் பிரிவினையை ஏற்படுத்தினார். இது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கெல்லாம் மீனாவும் சம்மதிக்க தான் செய்தார். அடுத்தடுத்து மீனாவின் அத்தையால் பல பிரச்சனைகள் வீட்டில் ஏற்படத்தான் செய்தது. வீட்டில் உள்ளவர்கள் பற்றி ஒன்றுக்கு மூன்றாக கொடுத்து பிரச்சனையாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டில் மற்றொரு கலகத்தை ஏற்படுத்தியுள்ளார் மீனாவின் அத்தை. தன் அண்ணனிடம் சொல்லி வாஷிங் மெஷின் வரவழைத்துள்ளார். மேலும் கண்ணன் வழக்கம் போல தனது குறும்பு தனத்தால் துணியை வாஷிங் மெஷின் துவைக்க போக எப்பொழுது சண்டை இழுக்கலாம் என்று காத்திருக்கும் மீனாவின் அத்தை கண்ணனின் துணியை கீழே போடுகிறார்.

மேலும் என் அண்ணா அவரு மகள் மற்றும் பேத்திக்காக வாங்கிட்டு வந்தது. உன் அழுக்கு துணியை துவைக்கிறதுக்காக இல்லை என்று சொல்ல கண்ணனுக்கு என்னவோ போல ஆகிறது. கிணற்றடியில் தனியாக நின்று அழும் கண்ணனை மூர்த்தி பார்த்து விட்டு பதற தனக்கு இது வேற வீடு போல இருப்பதாகவும் இங்கு இருக்கவே புடிக்கலை என்று கதறி அழுகிறார். இதனை பார்த்த ரசிகர்களுக்கும் கவலையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here