‘இப்போதைக்கு குழந்தை பெத்துக்குறத பத்தி என் கிட்ட பேசாத’ – கதிர் பேச்சால் அதிர்ச்சியடையும் முல்லை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா குழந்தையை காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் தனம் கர்ப்பமான விஷயத்தை வேறு எப்பொழுது சொல்லுவார் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மீனாவின் வீட்டிற்கு சென்று பேச போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றதை அடுத்து மூர்த்தி குடும்பமே சோகத்தில் உள்ளது. இதனால் தனத்தாலும் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்ல முடியவில்லை. மேலும் மூர்த்தி வேறு மீனாவை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்துக் கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மூர்த்தி தானே மீனாவிடம் பேசி அழைத்து வருவதாக கூறுகிறார். மேலும் ஜீவா, மீனா மற்றும் குழந்தையின் புகைப்படத்தை பார்த்து அழுகிறார். மீனாவிற்கு எத்தனை கால் செய்தும் எடுக்கவும் இல்லை. இதனால் மிகவும் கவலையும் அடைகிறார். மெசேஜ் செய்தும் அதற்கு பதில் இல்லை. அடுத்ததாக முல்லையும், கதிரையும் காட்டுகின்றனர்.

முல்லை குழந்தையை பற்றி பேச இப்போதைக்கு குழந்தையை பற்றி பேச வேண்டாம் என்று சொல்ல வழக்கம் போல அண்ணியை பற்றி பேசுகின்றனர். அடுத்ததாக மீனாவின் வீட்டை காட்டுகின்றனர். மீனாவை தன் வீட்டிலேயே தங்கவைக்க ஜனார்த்தனனும் கலையும் மீனாவிடம் என்னன்னவோ பேசுகின்றனர். இதனால் மீனாவும் குழப்பமடைகிறார்.

தமிழக மக்களுக்கு ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி!!

குழந்தை பெரியவள் ஆனதும் என்ன தேவை என்றாலும் அவங்க அண்ணா அண்ணிகிட்ட தான் நிக்கணும். நீ கெஞ்சிகிட்டே தான் இருக்கணும். உன் வாழ்க்கையை நீ வாழு. என்று குடும்பத்தை பற்றி என்னவோ கூறி மீனாவின் மனதை மாற்றுகின்றனர். மெல்ல மெல்ல ஜீவாவை இங்க வரவைக்கணும். அங்க போகவே விட கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் மீனா குழப்ப நிலையிலேயே உள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here