பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கதிரும் முல்லையும் சவாலில் ஜெயித்து காட்டி மல்லிக்கு பாடம் புகட்டி விட்டனர். மேலும் அவர்களின் ஹோட்டல் பிஸ்னஸ் முன்பை விட நன்றாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மூர்த்தி தனது வீட்டை ஜனார்த்தனனுக்கு விற்ற பிறகு பல சங்கடமான சூழ்நிலையும் ஏற்பட தான் செய்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் ஜனார்த்தனன் advantage எடுத்து கொண்டு வீட்டில் பல வேலைகளை செய்து வருகிறார். மூர்த்தியும் எதுவும் பேச முடியாமல் தவித்து கொண்டுள்ளார். இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இணைந்து மெகா சங்கமமாக ஓடிக்கொண்டுள்ளது.
திருமணத்துக்கு ரெடியான தமன்னா – எல்லாம் ஓகே தான்! ஆனா இந்த சிக்கல் மட்டும் இருக்கு!!
இப்படி இருக்க இப்பொழுது இந்த மெகா சங்கமம் முடிவடைந்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தரமான சம்பவம் காத்து கொண்டுள்ளது. அதாவது ஜனார்த்தனன் மீண்டும் தனது வேலைகளை ஆரம்பிக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் மூர்த்தி கத்தி விடுவார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்து வீட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் ஜீவாவை எப்படியாவது தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும் என்று ஜனார்த்தனன் பல வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார். இனிமேலும் குடும்பம் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மூர்த்தி நிலை மோசமாக தான் செய்யும்.