மாநிலம் முழுவதும், டெய்ரி பால் நிறுவனத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த முக்கியமான அறிவிப்பை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் விநியோகத்தை நம்பியே முழுவதுமாக வாழ்ந்து வருகின்றனர். பால் முகவர்களின் கோரிக்கை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பால் விலை லிட்டருக்கு குறிப்பிட்ட அளவு தொகை உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் டெல்லி மாநிலம் முழுவதும், டெய்ரி நிறுவனத்தின் பால் பாக்கெட் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல், தங்கம், மின்தடை போன்ற விலை நிலவரங்களை அறிய இந்த link-ஐ Follow செய்யவும்.
தற்போது வருடத்தில் 3வது முறையாக, டெல்லி என்சிஆர் பகுதியில் டெய்ரி மதர் நிறுவனத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ. 2 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில், இந்த பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.