பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததை அடுத்து கண்ணனிற்கு அவர் மீது ஒரு அபிப்ராயம் ஏற்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவை பார்த்து சிரிப்பதும், அவரை பார்ப்பதும் என நேற்று ஒரு காதல் காட்சியே இடம் பெற்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
நேற்றைய எபிசோடில் மீனா ஜீவாவிற்கு கால் செய்து கதிர் ரூமில் இருப்பதை பார்த்து கோபமடைந்தார். மேலும் தான் அந்த வீட்டிற்கு வர வேண்டும் என்றால் அந்த ரூம் இருந்தால் தான் வருவேன் என்று கூற ஜீவா எப்படியோ சமாதானம் செய்து அனுப்புகிறார்.
அதன் பிறகு முல்லை ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து வர கண்ணனுக்கு ஐஸ்வர்யாவை பிடித்து விடுகிறது. அவரை பார்த்து சிரிப்பதும், கதிர் முறைப்பதும் என பல காட்சிகள் இடம் பெற்றனர். மேலும் கதிர் முல்லை ஜோடிக்கு போட்டியாக கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி வர வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இன்றைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்துகொண்டிருந்தார். ஐஸ்வர்யா அழுக கண்ணன் தனக்கும் அழுகை வருவதாக கூற எப்படியோ பேசி ஐஸ்வர்யாவை சிரிக்கவும் வைக்கிறார். மேலும் கதிர் முல்லை ஜோடியை காட்டுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கதிர் கடை கணக்கை எழுதிக்கொண்டிருக்க முல்லை கதிரையே பார்த்துக் கொண்டிருக்க மறுபடியும் ஒரு காதல் காட்சியே அரங்கேறியது. மேலும் முல்லை நான் கணக்கு போடுகிறேன் என்று கூறி கணக்கை சரிபார்க்க அவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அப்படியே பொழுதும் விடிகிறது.
விடியற்காலையில் கண்ணன் கோவிலுக்கு சென்று வர முல்லை அவரை ஆச்சரியமாக பார்க்கிறார். என்ன என்று கேட்டதற்கு ஐஸ்வர்யாவிற்காக கோவிலுக்கு சென்று வந்ததாக கூறுகிறார். ஐஸ்வர்யாவிற்கு பிரசாதம் எல்லாம் கொடுக்க இதனால் முல்லையும் சந்தோஷமடைகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஜனார்த்தனன் குழந்தைக்கு ஜாதகம் பார்த்து விட்டு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார். அடுத்ததாக கண்ணன் ஹாலில் வந்து அமர, கடைக்கு போகவில்லையா என்று அவரின் அம்மா கேட்க கண்ணன் சலித்து கொள்கிறார்.
எனக்கு என்ன சம்பளமா தரீங்க?? என்று கூற சத்தியமூர்த்தி சொந்த வீட்டில் என்னடா சம்பளம் என்று கேட்க என் செலவுக்கு கூட காசு தர அவ்வளவு யோசிக்கிறீங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் கண்ணனை பார்க்கின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.