ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடர்களில் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் போட்டிகள்:
ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் தாமதமாக தான் நடைபெற்றது. அதுவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் துபாயில் தான் அனைத்து போட்டிகளும் நடைபெற்றது. அப்போது ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு இடது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் விலகினார். இதன் காரணமாக, பெங்களூரில் உள்ள தேசிய விளையாட்டு அகாடமியில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
தாராளமாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!
அவரது இந்த நிலை குறித்து பிசிசிஐ, “இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. அவரது காயம் குணமாகி போட்டிகளில் விளையாட தயாரானால் அவர் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கபடுவார்” இவ்வாறாக குறிப்பிட்டிருந்தது. தற்போது இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் அவர் விரைவாக சிட்னி செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் பூரணமாக குணமடைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதனை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இஷாந்த் சர்மா நான்கு முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் அவரது வருகை போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று நம்பப்படுகிறது.