தாராளமாக குறைந்த தங்க விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

0

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தங்க விலை சரிந்து வருவது நகைப்பிரியர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா பரவல் பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் போன்றவை பெரும் சரிவை சந்தித்ததால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது முதலீடுகள் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது. விளைவு தங்கத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது. வரலாற்றிலேயே இது தான் அதிகபட்ச விலையாகும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் தங்க இறக்குமதியும் பெருமளவு சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வர்த்தகம் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 3வது நாளாக சரிவை சந்திள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 33 ரூபாய் குறைந்து ரூ.4747க்கும், ஒரு சவரன் ரூ.264 சரிந்து 37,976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 66.70 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here