துர்கா கையில் வசமாக சிக்கிய வெண்பா – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி தன் குழந்தை என்றே தெரியாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார். இதனால் சௌந்தர்யாவும் மகிழ்ச்சியடைகிறார். தற்போது கண்ணம்மாவிற்கு சாதகமாக எல்லா விஷயங்களும் ஓடிக்கொண்டுள்ளது. எப்பொழுது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டும் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை கண்ணம்மாவும், சௌந்தர்யாவும் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். கண்ணம்மாவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்த துர்கா வெண்பாவை தேடி வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் போலீஸ் வர வேறு வழியில்லாமல் அங்கு இருந்து தப்பித்து செல்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா குழந்தை மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார்.

கண்ணம்மா கோவிலில் இறங்க அதே சமயம் பாரதி சௌந்தர்யாவும் இறங்குகின்றனர். இதனை பார்த்த துளசி பதட்டமடைந்து கண்ணம்மாவை வேறுபக்கமாக அழைத்து செல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யாவிற்கு துளசி கால் செய்து நடந்ததை சொல்ல அப்பொழுது கண்ணம்மாவின் குழந்தை அழுகிறது. கண்ணம்மா குழந்தையின் அழுகையை நிறுத்த தாலாட்டு படுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே சமயம் சௌந்தர்யாவிடம் இருக்கும் குழந்தை அழுக துளசியிடம் கண்ணம்மா அருகில் போனை வைக்க சொல்லி கூற அந்த தாலாட்டு பாடலை கேட்ட குழந்தை அழுகையை நிறுத்துகிறது. துர்கா சௌந்தர்யா வீட்டிற்கு சென்று நடந்தவற்றை அவர்களிடம் கூற வேண்டும் என்று நினைக்க அங்கு யாரும் இல்லாததை பார்த்து அங்கிருந்து செல்கிறார்.

பிறகு வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பா பெயர் வைக்கும் விழாவிற்கு ரெடி ஆகி வர ஹாலில் துர்கா அமர்ந்திருக்கிறார்.  துர்காவை பார்த்து வெலவெலத்து போன வெண்பா அவரிடம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சுகிறார். துர்கா மறுபடியும் தாலி கட்ட முயற்சிக்க வெண்பா எப்படியோ தப்பித்து ஓடுகிறார்.

மேலும் பாரதிக்கு அந்த சமயம் பார்த்து கால் வர வெளியே சென்று பேசுகிறார். கண்ணம்மா வந்த வண்டியில் கண்ணம்மாவின் புகைப்படமும் ஒட்டியிருந்தது. இதனை கவனிக்காமல் பாரதி அதன் அருகிலேயே பேசிக்கொண்டிருக்க அந்த சமயம் வெண்பா அங்கே வர இதனை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here