பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோடில் கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கொண்ட கதிர் அவரை சத்தம் போடுகிறார். பின் கண்ணன் நா பண்ணது தப்பு தான் என மன்னிப்பு கேட்க இனியாச்சும் ஒழுங்கா இரு. நா அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்கிறார். ஆனால் கதிர் எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் கண்ணனை வெளியே விடுவதாக இல்லை. இந்த விஷயம் மீனா, ஜனார்த்தனன், ஜீவா அனைவருக்கும் தெரியவர ஜனார்த்தனன் கண்ணனை கண்டபடி பேசுகிறார். ஜீவா என் தம்பி அப்படி எல்லாம் பண்ண மாட்டான் என்று சொல்லிவிட்டு இருவரும் தனம் வீட்டுக்கு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த நேரத்தில் கதிரும் வர கண்ணன் எங்கே என்று தனம், ஐஸ்வர்யா கேட்கின்றனர். கண்ணனை அதிகாரிகள் விடவில்லை என்று சொல்ல மூர்த்தி கண்ணன் ஏதோ திருட்டுத்தனம் பண்றான் என அசிங்கமாக பேசுகிறார். இதனால் ஜீவா, தனம் எல்லோரும் கண்ணனுக்கு சப்போர்ட் செய்கின்றனர். இந்த நேரத்தில் கதிர், கண்ணன் உண்மையாவே லஞ்சம் வாங்கிருக்கான் என்று சொல்ல அனைவரும் அதிச்சியாகின்றனர். அப்போது ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி வந்து விட, அவரை ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றனர். பின் மருத்துவர்கள் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக சொல்கின்றனர். இதைக் கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷப்பட இன்றைய எபிசோடு முடிவடைகிறது.