ஜீவாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – வர மறுக்கும் ஜீவா!! சூடுபிடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

0

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் ஜீவாவை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் மீனாவை பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் ஜீவா தனது குடும்பத்தினை பார்த்து விட்டு மீனா மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக உறுதி அளிக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்”

இன்று ஜீவாவை தேடி அனைவரும் செல்கின்றனர். மீனாவின் தந்தை ஜீவாவின் வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சண்டையிடுகிறார். அவர் கோபம் கொண்டு பேசும்போது மூர்த்தியும் கோபத்தோடு பேசிவிடுகிறார். தாங்கள் ஜீவாவை கண்டுபிடித்து கொள்வதாகவும் சொல்கிறார். இதனை அடுத்து ஜனார்த்தனன் கோபத்துடன் வீட்டை விட்டு சென்று விடுகிறார். அதே போல் தனது மகள் மற்றும் மனைவியிடம் நடந்ததை சொல்கிறார். இதனால் கோபம் அடையும் மீனா நாம் ஜீவாவை கண்டுபிடித்து இங்கு வர சொல்லி விடுவோம் என்று தெரிவிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இங்கு மூர்த்தி வீட்டில் அனைவரும் சோகமே உருவாக அமர்ந்து இருக்கின்றனர். முல்லை அனைவரிடமும் ஜீவா வீட்டை விட்டு வெளியே சென்றதற்கு நாமும் காரணம் தான் என்று சொல்கிறார். இதனால் அவரது மாமியார் கோபம் அடைந்து முல்லையை திட்டுகிறார். ஆனால், முல்லை நாம் அனைவரும் நமது காரியங்களை மட்டும் தான் செய்தோமே தவிர ஜீவாவை பற்றி யோசிக்கவில்லை என்று கூறுகிறார்.

ஜீவாவின் பதில்:

இதன் பிறகு, மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் தனியாக பேசிக் கொள்கின்றனர். அப்போது மூர்த்தி மிகவும் கவலையுடன் ஜீவாவை பற்றி கூறுகிறார். கதிர் அவரை சமாதானம் செய்து விட்டு அடுத்து செய்ய வேண்டியதை பார்ப்போம் என்று கூறி விடுகிறார். அதன் பிறகு, ஜனார்த்தனன் அனைத்து இடங்களிலும் ஜீவாவை தேடுகிறார். அப்போது ஜீவா நடந்து செல்வது தெரிந்து அவரிடம் பேசுகிறார்.

சித்ரா தற்கொலை வழக்கில் RTO விசாரணை நிறைவு – இன்னும் மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல்!!

ஏன் இவ்வாறாக இப்படி ஒரு முடிவினை எடுத்து விட்டதாக கேட்கிறார். ஜீவா இல்லை, தான் வேலை விஷயமாக வந்திருப்பதாக கூறுகிறார். மனசு சரி இல்லாத காரணத்தால் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறுகிறார். ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து மீனா மற்றும் குழந்தையை பார்க்க வாருங்கள் என்று கூறுகிறார்.

ஜீவா அதனை மறுத்துவிட்டு தான் வீட்டிற்கு சென்று விட்டு மீனா மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக கூறுகிறார். இதனால் கோபம் அடையும் ஜனார்த்தனன் உங்களுக்காக மீனா அங்கு சாப்பிடாமல் காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று சொல்கிறார். மூர்த்தி மற்றும் குடும்பத்தினரை தேடி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here