ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் விரைவில் அவர் குணமடைய பிராத்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பின் இரண்டாவதாக அப்போலோ மருத்துவமனை ஓர் அறிவிப்பை வெளியிட்டது அதில் கூறியதாவது, ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று அவரது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் இருந்து வருகிறார், பயப்படும் அளவிற்கு அவருக்கு ஒன்றும் இல்லை, விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளது. மேலும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தற்போது நம் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் “விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே முக ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.