தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் வானிலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே காணப்பட்டு வருகின்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை வழங்கியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும். வரும் 28 ஆம் தேதி வளிமண்டல சுழற்சி காரணமாக தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகள், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை இல்லாமல் கார்டை மட்டும் காட்டி பொங்கல் பரிசை பெறலாம் – அமைச்சர் அறிவிப்பு!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.