யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டே செல்லும் ஜீவா – பதட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தனம் கர்ப்பமாக இருந்ததில் இருந்து தலை சுற்றல், வாந்தி என இருக்க மீனா அதனை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்ப ஜீவா எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறார். மேலும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டும் வெளியேறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனா, ஜீவாவை பிரிந்து வருத்தத்திலேயே இருக்க முல்லைக்கு அடிக்கடி போன் செய்து ஆறுதலடைகிறார். மேலும் தனமும் ஒரு பக்கம் வாந்தி மயக்கம் என இருக்க மூர்த்தி பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறார். வீட்டில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனர்.

இந்நிலையில் ஜீவா வேலை விஷயமாக குமுளி செல்கிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் சென்று விடுகிறார். இதனை கதிரிடம் மட்டும் சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பதட்டமடைகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று தனம் புலம்ப முல்லை சமாதானம் செய்கிறார். முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா ஒரு ஜாடையில் சித்ரா போலவே காட்சியளிக்கிறார். இதனால் அந்த கதாபாத்திரத்தை மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இன்றைய எபிசோடில் மீனா முல்லைக்கு கால் செய்ய அதனை கண்ணன் எடுக்கிறார்.

ஏன் நீங்க வீட்டுக்கு வர மாட்ரிங்க, உங்களாக ஜீவா அண்ணா விரக்தியில் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார் என்று சொல்ல மீனாவிற்கு பயமாகிறது. உடனே ஜீவாவிற்கு கால் செய்ய சுவிட்ச் ஆப் என வருகிறது. அம்மா என்று மீனா கத்த கலையும், ஜனார்த்தனனும் வருகின்றனர். நடந்ததை கூற அவர்களும் பதட்டமடைகின்றனர்.

சிம்பு & கவுதம் கார்த்திக்கின் புதிய படம் ‘பத்து தல’!!

ஜனார்த்தனன் தெரிந்தவர்களுக்கு கால் செய்து விசாரிக்கிறார். மீனா அம்மா அப்பாவை பார்த்து உங்களால் தான் இது எல்லாம் என்று சொல்லி அழுகிறார். அவரை சமாதானபடுத்துகின்றனர். முல்லை தனத்திற்கு கால் செய்ய தனம் எப்படி இருக்க என்று கேட்க நான் எப்படி நல்லா இருப்பேன் என்று கூறி அழுகிறார். அதன் மூர்த்தி போனை வாங்கி பேசுகிறார்.

குடும்பத்தில் என்ன பிரச்சனை என்றாலும் இப்படி வீட்டை விட்டு கிளம்பலாமா? என்று கேட்க மீனாவிடம் இருந்து பதில் இல்லை. தனத்திற்கு உடம்பு சரியில்லை அதனால் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டா அதுக்கு இப்படியா?? இப்போ ஜீவா வீட்டை விட்டே போயிட்டான் என்று சொல்லி போனை வைக்கிறார். ஜனார்த்தனன் அங்கு வர மூர்த்தி பேசியதை சொல்கிறார். நாளைக்கு போயி அவனை என்னனு கேக்குறேன் என்று சொல்ல மீனாவிற்கு கோவம் வருகிறது.

அடுத்ததாக ஜனார்த்தனன் ஜீவா இப்படி சொல்லாமல் வீட்டை விட்டு சென்றிருக்கிறார். போனை சுவிட்ச் ஆப் வேறு செய்திருக்கிறார். அப்படியானால் அவர்களின் குடும்பத்தின் மீது மிகவும் கோவமாக உள்ளார். ஜீவாவை நம்முடனேயே வைத்துக்கொள்ள இது தான் சரியான நேரம் என்று திட்டம் போடுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here