விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலுமே படு மாஸாக டெலிகாஸ்டாகி வருகிறது. அதிலும் பிரைம் டைம் சீரியல் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக ஏகப்பட்ட ட்விஸ்ட்களை வைக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மகா சங்கமத்தில் இணைந்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த இரு சீரியல்களிலும் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளது. அதாவது ஒரு பக்கம் ஜெனியின் குழந்தையை ஈஸ்வரி தூக்கி செல்கிறார்.
இந்தப் பக்கம் ராஜி தான் காதலித்த பையனுடன் வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ராஜி காதலித்த பையன் அவரை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விடுவாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ராஜிக்கு கதிர் துணையாக இருப்பாராம். மேலும் இவர்களுக்கு அடுத்து வரும் எபிசோடில் திருமண முடிந்து விடுமாம்.