தமிழக மக்களே…, வாட்டி வதைக்க காத்திருக்கும் உறைபனி…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

0
தமிழக மக்களே..., வாட்டி வதைக்க காத்திருக்கும் உறைபனி..., வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜனவரி 26) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

மேலும், நாளை (ஜனவரி 27) முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவும் என ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்ஸாக இருக்கும். இன்று (ஜனவரி 26), ஜனவரி 27, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here