பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தூக்கி விட்ட அந்த நாள் இன்னைக்கு தான்.. மெமோரிஸ் பிரிங் பேக்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தூக்கி விட்ட அந்த நாள் இன்னைக்கு தான்.. மெமோரிஸ் பிரிங் பேக்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தூக்கி விட்ட அந்த நாள் இன்னைக்கு தான்.. மெமோரிஸ் பிரிங் பேக்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா பிறந்த நாள் இன்று பிரபல இயக்குனர் ஒருவர் தனது நினைவுகளை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார்.

விஜே சித்ரா:

தொலைக்காட்சியில் தனது சினிமா கேரியரை ஸ்டார்ட் செய்து, எல்லா டிவியிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து மக்களிடம் பிரபலமானவர் தான் விஜே சித்ரா. இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து எல்லா இல்லத்தரசி வீட்டில் ஒரு ஆளாக மாறினார். அதன்பின்னர் ஹேமந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் ஏற்பாடுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி சந்தோஷமாக போன சித்ரா வாழ்க்கை கடந்த 2020ம் டிசம்பர் மாதம் 9ம் தேதி இரவோடு முடிந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அவர் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என்று சித்ரா பெற்றோர்கள் புகார் கொடுத்த நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் சிவ சேகர், சித்ரா குறித்து தனது நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இன்று நான் இயக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் முல்லை கதாபாத்திரத்தின் பிறந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சீரியலில் வரும் கதாபாத்திரத்தின் பிறந்தநாளை கொண்டாடுவது என்பது இதுவே முதல்முறை. இதனை தொடர்ந்து சித்ராவை முல்லையாக கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தினேன்.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த தங்கை ரோஷினியா இது?? யாருமே பார்த்திராத புகைப்படம்!!

கடந்த 2020ம் ஆண்டு முல்லையின் பிறந்தநாளை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் பிரமாண்டமாக கொண்டாடும் விதமாக எபிசோட் டெலிகாஸ்ட் ஆச்சு. அந்த எபிசோடில் முல்லை கணவர் கதிர் அவருக்கு அடுக்கடுக்காக பரிசை கொடுத்து முல்லையை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்தார். இந்த எபிசோடு மூலம் தான் சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்தது. இதற்கு முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கும் பெரும் பங்கு உண்டு. அதன் பிறகுதான் அவர் உயிர் பிரிந்தார். தற்போது முல்லைக்கு இன்று பிறந்தநாள் என்று கூறி சித்ரா புகைப்படத்தை பதிவிட்டு தனது கவலையை இயக்குனர் சிவ சேகர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Siva Sekar (@siva_sekar_director)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here