மாநிலத்தில் குரு தேக் பகதூர் தியாக தினத்தை, முன்னிட்டு நவம்பர் 28ஆம் தேதியை தடை செய்யப்பட்ட விடுமுறை தினமாக அறிவிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
விடுமுறைக்கு தடை:
மாநிலத்தில் பண்டிகை அல்லது முக்கியமான தலைவர் குறித்த தினங்களுக்கு அரசின் சார்பாக பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில், குரு தேக் பகதூர் தியாக தினம் நவம்பர் 28ஆம் தேதி, நினைவு கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், இந்த நினைவு தின விடுமுறையை தற்போது, தடை செய்ய்யப்பட்ட விடுமுறையாக அறிவிப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், இந்த நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Group 4 பதவிக்கு 9,168 காலிப் பணியிட அறிவிப்பு வெளியீடு – மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹரியானா மாநில செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். அரசின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.