விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரொமான்டிக் சீன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் வெகுகாலமாக மக்கள் எதிர்பார்த்து வந்த கதிர்-முல்லையின் ரொமான்டிக் சீன்கள் வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த காதல் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் மூன்று ஜோடிகளில் ஒரு ஜோடியான கதிர்-முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக் – அவதியில் பொது மக்கள்!!

அதன் பின்பாக முல்லை கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் மற்றொரு தொடரான பாரதி கண்ணம்மாவில் அறிவுமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காவ்யா இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நெடுநாட்களாக ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ தொடரில் குடும்ப பிரச்சனைகளுடன் கதைக்களம் நகர்கிறது. கதிர்-முல்லை காதல் காட்சிகளை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போது தொடரில் கதிர்-முல்லை காட்சிகள் வரும் என ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக கேட்டு வந்தனர். அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக முல்லையாக நடித்து வரும் நடிகை காவ்யா ‘இப்போது தான் ஆரம்பித்துள்ளது. கூடிய விரைவில் காதல் காட்சிகள் வரும்’ என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பின்படி பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர்-முல்லை காட்சிகளை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஒருவாரத்திற்கும் மேலாக கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்போது மீண்டுமாக அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here