ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து இன்று முதல் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபடவுள்ளார். இதனால் இன்று முதல் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் பூட்டிருக்கும். இதனால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ரேஷன் கடை:
கடந்த 2018ம் ஆண்டு முதல் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அவர்கள் கோரிக்கையாவது, ஒரே துறையில் கீழ் பொது விநியோக திட்டம் செயல்படுத்த வேண்டும், சம வேளைக்கு சம ஊதியம், பொது விநியோக திட்டத்தை சீரழிக்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்தனர். அப்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் ஊழியர்கள் அறிவித்தனர். இதனால் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அப்போது பிரச்சனையை சுமுகமாக முடித்து. மேலும் ஊதிய குழு அமைப்பதற்கான குழுவையும் அரசு அமைத்தது. தற்போது இந்த குழு அமைத்து 3 வருட காலமாகியும் ரேஷன் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வாகவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து கடந்த 10ம் தேதி அன்று தமிழக கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்கள் அனைவரும் தொழில்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டம் தொமுச செயலாளர் பொன்னுராம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, டிடியுசி உள்ளிட்ட பல தொழில்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கடந்த 2018ம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை பற்றி பேசினார். தமிழக அரசால் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே தற்போது அரசு, ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவெடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் – விரைவு தரிசன டிக்கெட் அதிகரிப்பு!!
இதன்படி இன்று காலை 10 மணியில் இருந்து ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று முதல் நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது ரேஷன் கடைகள் மூடப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் போய் சேர்வதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.