கண்ணனுக்காக பிரஷாந்திடம் சண்டைக்கு போகும் கதிர் – திருமண விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி காட்டும் நேரத்தில் பிரஷாந்த், ஜீவா மற்றும் கதிர் வந்து விடுகின்றனர். இந்நிலையில் பிரஷாந்த் கண்ணனை கண்டபடி அடிக்க கதிர் வந்து காப்பாற்றுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

காரைக்குடியில் வைத்து கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற கண்ணன் தாலி கட்டும் நேரத்தில் கதிர் ஜீவா வந்து விடுகின்றனர். கண்ணன் மணக்கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகின்றனர். கண்ணனும் தன் அண்ணன்களை பார்த்து விடுகிறார்.

அருகில் வந்து தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று சொல்கின்றார். வீட்டில் கஸ்தூரி செய்த கலாட்டாவையும், அனைவரும் கண்ணன் அப்படிப்பட்டவன் கிடையாது என்று நம்பி கொண்டுள்ளனர் என்றும் சொல்கிறார்.

கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கதிர் அதிக கோபத்துடன் இருக்குறார். அப்பொழுது பார்த்து பிரஷாந்த் அங்கு வர திருமணம் ஆனதை நினைத்து மிகவும் கோவமடைகிறார். கண்ணனை கண்டபடி அடிக்கிறார். இதனால் கோவமடையும் கதிர் பிரஷாந்தை அடிக்கிறார்.

அவன் மேல கை வைக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத என்று சொல்கிறார். அதையும் தாண்டி பிரஷாந்த் அடிக்க போக ஐஸ்வர்யா வந்து தடுக்கிறார். உன்ன எனக்கு பிடிக்கலனு சொல்லியும் வீம்புக்கு இந்த கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டு இப்போ எங்க மேல குறை சொல்ற என்று சொல்கிறார்.

இதனால் கோவமடையும் பிரஷாந்த் உங்க ரெண்டு பேரையும் வாழ விட மாட்டேன் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் என்ன செய்வது என்று கண்கலங்குகின்றனர்.

வீட்டிற்கு செல்ல கண்ணன் எங்கே என்று அனைவரும் கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க அப்பொழுது பிரஷாந்த் வந்து ஐஸ்வர்யா கண்ணன் திருமணம் செய்து கொண்டதை பற்றி சொல்கின்றார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக்காகிறது.

நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் இன்றைய எபிசோடை பார்க்க கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here