நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் அப்டேட் – மீண்டும் இரட்டை வேடத்தில் மாயன்! அப்போ கொலையாளி அவர் தானா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் தற்போது புதிய ட்விஸ்ட்டாக மாயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான செய்தி இணையத்தில் உலா வருகிறது.

நாம் இருவர் நமக்கிருவர்

நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் முத்தரசை கொலை செய்தது யார் என்ற மர்மம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஐஸ்வர்யா, நாச்சியார், கத்தி, காயத்ரி என அனைவர் மீது சந்தேகம் வலுத்து கொண்டே செல்கிறது.

இதில் யார் கொலையாளி என்று காட்டுவர்களா?? இல்லை இந்த மர்மம் சீரியலில் தொடர்ந்து கொண்டே இருக்குமா?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டே உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது காயத்ரி தான் கொலையாளி என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த குற்றவாளி பற்றிய உண்மையை யார் தான் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க தற்போது புதிய ட்விஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது மாறன் என்ற கதாபாத்திரன் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளது. அதுவும் மாயன் தான்.

மாயனும், மாறனும் இரட்டை பிறவிகளாம். நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் போல இந்த இரண்டாம் பாகத்திலும் இரட்டை வேடத்தில் செந்தில் நடிக்கவுள்ளார். அப்படி என்றால் கொலைகாரன் மாறனாக கூட இருக்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here